Tuesday, November 17, 2009

உயிர் எழுத்துக்கள்

வாழ்கையின் அதிர்வுகளை
உணரும் பொழுதுகளல்
வாழ்கிறேன் நான்

இதயக் கருவறைக்குள்
உயிரின் வலியினை
உணர்கிறேன்

உயிர் எழுத்துக்களை
என் ஆண்மா
மென்று துப்பிற்று

பிரிவின் துயர்
ஏக்கங்கள் இடையே
போராட்டத்தின் மைல் கற்களையும்
பச்சை புல்வெளிகளையும்
தேடி அலைகிறேன்

விழி மூடா சோகம்
இமை மூடியபின்னும் தொடர்கிறது

வசந்த காலங்களில்கூட
சாவின் ஓலங்களை கேட்டிருக்கிறேன்
இன்னும் ஓயவில்லை

தொடக்கமோ முடிவோ
என்னால் முடியவே இல்லை
வாழ்வோ மரணமோ
என்னால் இயலவே இல்லை

-yousuf salman-
12/sep/2007

1 comment:

  1. excellent salaman,,, i have no words to proud u,,,, amazing...
    keep going...im always ur fan.. _aazeer_

    ReplyDelete

Please add your commends