வாழ்கையின் அதிர்வுகளை
உணரும் பொழுதுகளல்
வாழ்கிறேன் நான்
இதயக் கருவறைக்குள்
உயிரின் வலியினை
உணர்கிறேன்
உயிர் எழுத்துக்களை
என் ஆண்மா
மென்று துப்பிற்று
பிரிவின் துயர்
ஏக்கங்கள் இடையே
போராட்டத்தின் மைல் கற்களையும்
பச்சை புல்வெளிகளையும்
தேடி அலைகிறேன்
விழி மூடா சோகம்
இமை மூடியபின்னும் தொடர்கிறது
வசந்த காலங்களில்கூட
சாவின் ஓலங்களை கேட்டிருக்கிறேன்
இன்னும் ஓயவில்லை
தொடக்கமோ முடிவோ
என்னால் முடியவே இல்லை
வாழ்வோ மரணமோ
என்னால் இயலவே இல்லை
-yousuf salman-
12/sep/2007
excellent salaman,,, i have no words to proud u,,,, amazing...
ReplyDeletekeep going...im always ur fan.. _aazeer_