Tuesday, November 10, 2009

தீராத வாழ்வின் வலி...


"தீரா வலிகொண்டலைந்த நாட்கள் எல்லாம் பொய்யோ மெய்யோ அல்ல அது ஒரு மாயை, அவனவன் பார்வைக் கோளத்தின் எதிர்வினை"

உயிரின் நினைவுகளில் நசுங்கி வாழும் ஓரு மாற்றான் தேச பறவை நான். என் ஆற்றாமை கனவுகளில் தொற்றி நிற்கும் சோகம் ஒரு வண்மமான கற்பழிப்பு. வெப்பிசாரம் கொல்லும் இரவில் மனம். மனிதப்பிண்டமாய் இங்கே அலைகிறேன் நான். என்னையும் என் ஆண்மாவையும் பற்றி நிற்கும் சோகம், ஒரு ஈரம் செறிந்த பின்மாலை வெய்யில் போல் அழுது கரைந்து கொண்டிருக்கிறது.

மனம் எதிலும் லயிப்பற்று, சஞ்சார வெளியின் எல்லா கொப்புகளிலும் பிடிப்பற்ற தருணங்கள் இப்போதும் உள்ளது. என்னிடம் இருப்பது அவ்வளவே என்றாலும், நம்பிக்கைகள் காற்றின் ஈரம் போலும், மூச்சின் வெப்பிசாரம் போலும் என்னுள் எழுந்து கொண்டுதான் உள்ளது. அப்போதெல்லாம் இந்த வாழ்வு உண்மையென்றும் இதுதான் வாழ்வு என்றும் மனம் மீண்டும் சொல்கிறது. நம்பிக்கை எழும் தருணங்கள் காட்டுத் தீ போலும், உடல் முழுதும் பறவிப் பிடிக்கிறது தீ. இப்படியேதான் என்வாழ்வு இனிக்கழியும் என்று நம்பிக்கை எனக்குச் சொல்லிற்று.

அவள் என்னை அடித்து திட்டித் தீர்ந்த தருணங்கள் என் நினைவுகளில் இன்னும் உள்ளது, அந்த தருணங்களுக்காய் இன்னுமொரு முறை பிறக்கலாம், அவள் மகனாய்த்தான் பிறக்க வேண்டும். அவள்தான் என் தாய். அவள் மடிசாய்ந்து தூக்கம் தொலைந்தோட அவள் அரவனைப்பிலும் ஸ்பரிசத்திலும் மரணம்வரை படுத்துக்கிடக்க வேண்டும். இந்த உலகிலேயே மிகச்சிறந்த சமையல்காரி. அன்பில் ரணமாய்க் கொல்லும் கொலைகாரி. எனக்கு அவள் அன்பைவிட அதிகமாய் அவள் என்னைப் பற்றி சொல்லும் பொய்கள் பிடிக்கும். நேற்றும் என் கனவில் வந்தால், ஏதோவொன்றுக்காய் என்னை அடித்தாள், பின் அவள் மடியில் எனைப் புதைத்து தலை
கோதிநாள், நான் தூங்கிக் கிடந்தேன் அப்போது.

அவர் பற்றியும் சொல்லியாக வேண்டும். அவரை நான் அப்படித்தான் அழைப்பது. என்தாய்மீது அவருக்கு அவ்வளவு காதல், அதனால் அவரை அதிகமாய் பிடிக்கும். அவரும்தான் என்னைப் பெற்றது. அவரின் அன்பு நெருடச் செய்வது அவரின் பார்வைகளில் இருந்து தப்ப என்னும் பொழுதுகளில்தான். சிறந்த உழைப்பாளி, மிகச்சிறந்த படைப்பாளி.

சப்தமான மௌணங்களின் கண்மையினூடே, என் ஆண்மாவை வெறித்துப் பார்க்கும் தருனங்களும், மனம் முழுதும் என்பற்றிய கனவுகள் சுமப்பதும் அவளேதான், அது அவ்வளவு எளிதல்ல. அவளுடன் வாழும் நாட்கள் பற்றி இன்றும் நினைத்துக் கொண்டேன். சென்ற நாட்களில் அவள் பற்றிய நினைவுகள் பசுமையாய் இருந்தது போல், நாளையும் அவள் பற்றிய பசுமையான நினைவுகளை என் நெஞ்சில் சுமப்பேன். அவள் பற்றிய அழகான நினைவுகள் இடை இடை நீண்டு விசாலித்துச் செல்லும் தருணங்கள் எல்லாம், மழை இடை சாரல் போலும், பனி மூடிய பாதை பொலும், இமை மூடி இருக்கமாய் அழுதுகொள்ளும் தருணங்கள்தான் அவை. என் சிந்தனைக் கோளமும், அவளின் சிந்தனைக் கோளமும் ஒன்றாய் ஒத்துப் போகவே வேண்டுகிறேன். இல்லையெனில் அங்கேயும் அதிர்வுகள் நிகழ்வதை தவிர்க்க இயலா!

என் உள்உணர்வு வெறானது அல்லது வேறொன்றால் ஆனது. உங்கள் உணர்வுகளோடு என்னால் வாழ இயலாது. என் கலாச்சாரத்தில் மூத்திரம் கழிக்க இயலாது. இல்லாதவைகளோடு புணர்தலும் இயலாது. அழகான நிலவும், நீலம் கவிந்த இருளும், மழைநால் குடையும், காற்றை ஜெயித்து விட்ட திமிருடன் பட்டம் விடும் தெருச்சிறுவனும், தெரு நாயோடு சண்டைபிடிக்கும் முதியவனும், தெருநாய் போல் அலையும் அனாதைப் பயலும் என்று என் பெருவெளியில் கொட்டிக்கிடக்கிறது என் ஆண்மா. இவ்வாறாகவே கழிகிறது என் பொழுதுகள். இவ்வாறாகவே வாழ்ந்து விட்டு செத்துப்போகிறேன் நான்.
 
-yousuf salman-

2 comments:

  1. தொடர்ந்து பயணிக்க எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

    irshad mohamed

    ReplyDelete
  2. இடை இடை என்பற்றிய நம்பிக்கைகள் காற்றின் ஈரம் போலும், மூச்சின் வெப்பிசாரம் போலும் என்னுள்ளும் எழுந்து கொண்டுதான் உள்ளது.... பார்ப்போம்

    ReplyDelete

Please add your commends