Tuesday, May 8, 2012

நான் மனிதனாய் வாழ்வதேயில்லை


ஆயிரத்து எட்டாவத தடவையாக இருக்கலாம்
ஆண்மாவற்ற எனதெல்லைகள் உடைபட உடைபட
நான் உடைபட்டு அழுவது

பசி, உணவு என்று மட்டுமே
அலையும் வாழ்வாயிற்று இன்று
என் பருவகால கனவுகள் ஆதிகால நினைவுகள் ஆயிற்று

பெரும் வலிகளின் பிற்பாடும்
ஒரு பெரும் கருணையின் பிற்பாடும்
நான் மனிதனாய் வாழ்வதேயில்லை

என் வெற்றிகள் என் தோழ்விகள்
என்னை ஒன்றுமே செய்கிறதில்லை

ஒரு ஜடப்பொருளின் நிழலாய்
நான் மாறியிருக்கிறேன்
என் நிழல் என்றுமே கரைவதுமில்லை அழிவதுமில்லை

வாழ்வு பற்றி எண்ணிக் கொள்ள என்னதான் இருக்கிறது
பசியும் அரவமான கேவலும் தவிர

பால்ய காலத்து காதல் அறியேன்
அதன் பிற்பாடு எதுவுமே அறியேன்
எத்தனை இளப்புகள் நிகழ்தன
நான் இளந்தவை பற்றி அறியேன்
உடைந்து உடைந்து அழுவது தவிர
நான் வேறொன்றும் அறியேன்

இன்றுடன் ஆயிரத்து எட்டாவத தடவையாக இருக்கலாம்
நான் இப்படி அழுவது

-Yousuf Salman-
(Tuesday, 08 May 2012)

Wednesday, March 28, 2012

கபூர், உங்களுக்கு எங்கள் நன்றிகள்




இன்றைய இரவு ஒரு மீளாத்துயர்,
மனதின் செரிமானம் கூடி
உங்களின் நினைவுகள் கணன்று
எரிகிறது கபூர்

உங்களின் ஆண்மா
இறைவனின் விதி நாடி செல்கிறது
இறைவன் உங்களுக்கு முடிவே இல்லாத
சொர்க்கத்தினை அருள்வானாக

-yousuf salman-
(Wednesday, 28 March 2012)

Thursday, February 9, 2012

அபத்தங்களின் உயிர் எங்கிருந்து தொடங்குகிறது


ஒரு தாயின் வெறுமையான உருவம் பற்றி
நீ என்ன நினைக்கிறாய்
அவள் மௌனமாய் வெறுப்பை அமிழ்ந்து
உணவு உண்ணும் அந்த நொடி பற்றி
கனவுகளைத் தேடியே தொலைந்து போன காலங்கள் பற்றி
வெறுமையாய் காலங்களோடு புணர்ந்து கண்விழித்த இரவுகள் பற்றி
நீ என்ன நினைக்கிறாய்

இந்த அமைதியான பொழுதுகள் பற்றி
அபத்தங்களே நிறைந்த இந்த வாழ்வு பற்றி
உன்னிடம் சொல்ல வேண்டும்
முடிகிறதாய் இல்லை இந்த கீழ்திசையின்  சூனியகாலம்
மேல்திசை நோக்கிப் பறக்கும் பறவைகள்
எவ்வளவு அற்புதங்களை கானும் இப்போது
றம்மியமான குளிரும், நிலவும், இருளும்
பின்னர் பனி போர்திய காலை விடியல்

வாழ்வின் வலி
தீராது இத்துயர்
கனவுகளை அடைதல் தவிர எனக்கொன்றும் இல்லாதினி
கனவுகளை அடைதல்
அல்லது இப்படியே வலியோடு அலைதல்
எங்கிருந்தும் தொடங்களாம் உயிரின் விதை

-yousuf salman-
(Wednesday, 08 February 2012)