Saturday, March 27, 2010

அன்பின் உயிர்மெய் தாய்

காட்டுப்பிரியத்துடன்…

என் புரிதலின் நின்றும் என் தாய் பற்றிய மனப்பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்கையின் எல்லைகள் கடந்து பயணிக்க நினைத்தவன்தான். ஆனாலும் வாழ்வின் எதார்தமும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் சிறைகளாய் என்முன் நிற்கிறது. இப்போதெல்லாம் நீண்ட, மிக நீண்ட இரவுகலில், மனம் நினைவுகலை அடுக்கி வைத்து பிரித்துப் பார்க்கிறது. நான் இழந்தவை மிக அதிகமாய் உள்ளன, அத்தனை இழப்புக்களையும் பாடி முடித்து பின்னும், வாழ்வின் மீதான நம்பிக்கைகள் எட்டாத் தொலைவிலேயே கிடக்கிறது. அத்தருணம் என் தாயே நம்பிக்கைகளின் பிறப்பிடமாக இருக்கிறாள்.

பனிஇடை காடுநீக்கி
நீண்டோடுகிறது சிறுஓடை
சோகம் கப்பிய மலைக்காடு

நிழழும் நிழழ் படும் வெயிலும்
மரமும் நிழல் தரும் சுகமும்
காட்டுவழி ஒற்றைப் பாதை

செந்தீ விழுங்கும் மேற்கு வானம்
வெண்மை போர்திய இரவு
இரவும் நிலவும்
நானும் அவள் நினைவும்

கூடு கட்டிய மரங்கள்
துயரென வந்தது புயல்
கூடும் இல்லை மரமும் இல்லை

என் தந்தையின் மறணத்தின் இறுதி ஓலங்களில், அவர் அவருடைய பிரிவு பற்றிய ரணங்களோடும் அன்பின் காயங்களொடும்தான் வாழ்ந்தார். வெறுமையான வெளியை பார்த்துக் கொண்டும் தன் இயலாமை பற்றிய கசப்பான நினைவுகளோடும்தான் அவரை நான் இறுதியாக பார்த்தது. அப்போதெல்லாம் அவருடைய அன்பின் வெறுமையை என்னாள் உணர முடிந்தது. அதனால்தான் அவரைப்பற்றி நினைக்கையில் நான் அழுதே விடுகிறேன். அந்த அன்பின் மிச்சத்தை நினைவுகளாய் அவர் எனக்கு தந்திருக்கிறார்.

இந்த இழப்பின் பின்னர் என்னுடன் வாழும் ஜீவன் என் தாய், அவள் பற்றிய நினைவுகளிள் நான் சில இரவுகளில் இறந்தே விழித்திருக்கிறேன். அவள் அன்பை நான் இவ்வாறுதான் உணர்கிறேன்.

“சின்னஞ்சிறு மழலையாய்
என்
தாயின் மடியில் நான்
தவழ்ந்த காலையில்
நான் உணர்ந்து வைத்திருந்தது
ஒன்றே ஒன்றுதான்:

“இந்த உலகம்
என் தாயின் மார்பகத்தை விட
பெரிதில்லை”

வளர்ந்தேன்!
சீனத்து மண்ணையெல்லாம்
கால்களால் கடந்தேன்!

சாங் ஜாங்கையும்
மஞ்சள் நதியையும்
என்
இடுப்புக்குக் கீழே
ஓடவிட்டேன்!

இவ்வளவுக்குப் பிறகும்
இப்போதும் சொல்கிறேன்:

“இந்த உலகம்
என் தாயின் மார்பகத்தை விட
பெரிதில்லை”
-ராகுவாய் பசாங்
(சீன தேசம்)



போன றூற்றாண்டில் ஒரு கவிஞனின் மறைவுக்காக உலகமே கண்ணீர் வடித்தது அவனுக்காக மட்டும்தான் அவன்தான் கலீல் ஜிப்ரான்-மானுடத்தின் குரலாக ஒலித்த மகா கவிஞன். வாழ்கையை வாழ்கைக்கு உள்ளேயிருந்து பார்காமல் வாழ்கைக்கு வெளியே இருந்து பார்தவன். அவன் தன் தாய் பற்றி 'முறிந்த சிறகுகள்' எனும் தொகுப்பில் இவ்வாரு எழுதுகிறான்.

நீ பூமியில் பிறக்காமல் இருந்திருந்தால்
ஒரு தேவதையாய் இருந்திருப்பாய்
என்றார் என் அம்மா.

“இப்போதும் நான் தேவதைதான் என்றேன்”

“தேவதையானால் சிறகுகள் எங்கே?”
அம்மாவின் கைகளை என் தோள்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு
சொன்னேன்:

“இவைதாம் என் சிறகுகள்”
அப்போது அம்மா சொன்னார்:

“இப்போது அவை
முறிந்த சிறகுகள்”

கலீல் ஜிப்ரானின் வரிகளோடும் என் தாய் மீதான காட்டுப்பிரியத்தோடும்.

-yousuf salman-

Thursday, March 11, 2010

துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

திருமாவளவனின் 'இருள் – யாழி' எனும் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் ஏதோவொரு பக்கத்தில் காணக்கிடைத்த ஒரு சிறு எழுத்தின் பகுதிதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

அதன் பகுதி வருமாறு; 'மனசு மகிழ்ந்து விரியும் கணங்களில் சடுதியில் புகுந்து அழித்துவிட்டுப் போகிறது கடந்தகாலத் துயரங்களின் கொடு நினைவு'.

துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

சுதந்திரமாய் பறக்கும்
வெண்நிறமான
பறவையொன்றினை
நீ நிச்சயமாய்
கண்டிருப்பாய்

சிறகுகள் இருந்தும்
சிறைபடாமல் இருந்தும்
எல்லாம் இருந்தும்
பறக்க முடியவேயில்லை

பெருநிழலாய் தொடரும்
நினைவுகளின் உயிர்
மனம் கிடந்தழும் வாழ்வாயிற்று என்வாழ்வு
துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

ஊசியிலை காடுகளினுள்
ஈரம் செறிந்த காரிருலினுள்
யாருமற்ற தனிமையில் அழுமே
அந்த ஒற்றை நிலா

தெருமுனையில்
யாருமற்ற வெளியில்
குப்பையினுள்
முகம் புதைத்தழுவானே
யாறோவொரு அனாதைப்பயல்

வானில்
நட்சத்திர வெளியில்
எது என்னவளின் பாடல்
என ஏங்கித்தவிப்பானே
இருளின் காதலன்

இவை எல்லாமும் என்பாடல்தான்

நீலமான கடலும்
பச்சையான வயலும்
புழுதிபடிந்த நிலமும்
அந்த நிலத்தின் மனிதனும்
என்று விட்டு வர
என்னால் எப்படி முடிந்தது

தாயின் முகம் அறியா வேதனை
அனிச்சையான சாபமோ
இல்லை இச்சையான பாவமோ

முடிவதாய் இல்லை
பெருநிழலாய் தொடரும்
நினைவுகளின் உயிரும்
தனிமையின் இசையும்

மனம் கிடந்தழும் வாழ்வாயிற்று என்வாழ்வு
துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன்
நான் உனக்கு...

- yousuf salman -
Time 05:10 AM