Wednesday, December 9, 2009

முகம் புதைத்து அழுத, அத்தருணம்

காரிருள் முழுவதுமாய்
மூடிய அறையினுள்ளே
மெல்லிய
மிக மெல்லிய
ஒளி பறவிக்கிடக்கிறது

அத்தருணம்
தலையணை முகம் புதைத்து
அழுது தொலைகிறேன்
நான்

பறவிக்கிடக்கும் இருள்போலும்
மனம் முழுதும் ஆழப் புதைந்து கிடக்கிறது
இருள்

வாழ்வின்
வடிவங்கள்
அல்ல
படிமங்களில்
தொற்று நிக்கும் சோகம்
என்னவென்றே புரியவில்லை
பார்!

வாழ்வின்
எல்லா கொப்புகளில்
தவிப்புகளும்
ஏக்கங்களும்
நிமிடங்களின்
இறுதி விணாடிகளிலும்
தொடர்கிறதுதாம்
பார்!

வாழ்வின்
ரணப்போழுதுகள்
என்பதை தவிர்த்து
எதனையும் சொல்ல இயலவில்லை
என்னால்.

-yousuf salman-
Time 02:30AM