மிகைதலின் கர்வம் கொஞ்மாய்
குறைய ஆரம்பித்திருக்கிறது
மேய்ந்து, கனவுகளில் உழன்று
கழைப்படைந்து வீழ்கையில்
நினைப்பது போல் அவ்வளவு
எளிமையானதாய் இல்லை
இங்கே,
நாட்களை கடந்து செல்லுதல் என்பது
விடியும் முன்னமே தூங்கி
விழித்த முகங்களை கான்கையில்
சோர்வுடன் அயர்ந்து தூங்கி விழிக்கையில்
பகல் பன்னிரெண்டும் தாண்டி இருக்கும்
எனக்கும் அன்றைய நாள் முடிந்திருக்கும்
என் நாட்களை
என் இரவுகளின் எண்ணிக்கை கொண்டு
வாழ்தல் என்பது எவ்வளவு பெரிய ரணம்
என் மரம் கொஞ்சம்
சூழ் கொள்கிறது போலும்
அப்படியாயின் என் கனவுகள்
சினைகொள்ள காத்திருக்கிறது
பனி படியும் காலங்களில்
பூக்கல் சினை கொள்ளும்
இளவேனிக் காலம் கழித்து
என்மரம் ஆயிரம் பூக்களை பாடவிடும்
வரும் வசந்தமான காலம் பற்றி
என்பாடல் ஓங்கி அழுது ஒலிக்கும்
அப்போது நீயும் என்னுடன்
சூழ்கொண்ட கதைகள் பேசி
வரும் இறப்பின் நாள் பற்றி
மௌனமாய் காத்திரு, அதுபோதும்
-yousuf salman-
(Wednesday, 05 October 2011)
(Wednesday, 05 October 2011)