என் நன்பர்களின் பிரிவின் துயரில் நான் எழுதி பத்திரப்படுத்திக் கொண்ட என் நினைவுகளை இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன். முன்பே பழகிய சொற்களாக இருந்தபோதிலும், என் இறந்த பொழுதுகளை என்னால் இவ்வாறுதான் எழுதமுடிகிறது.
மடல் 01
ஜன்னல் கண்ணாடியும்
பின் தாழில் தெரியும் கரு நீல ஒளியும்
அப்பால் பொழியும் ஈரமான பனிக்காற்றும்
நாம் நற்பாகி, பழகித்திரிந்த நினைவுகள் இந்தப் பிரிவினிடை நீண்டு கிடக்கிறது என்னுள். இருந்தபோது இல்லாத ஏதோவொன்று என் புத்தியை குடைகிறது, நான் தவிர்த்துத் தவிக்கிறேன். செம்மணல் சாலைகளிலே என் நினைவுகள் கிடப்பதற்க்குக் காரணம், நான் என்பது என் நன்பர்களால் ஆனஉயிர் என்பதால்தான். நான் பார்த்த ஆகச்சிறந்த மனிதர்களில் நீங்களும் உள்ளீர்கள் எனக் கொள்கிறேன். ஆதலினால் சொல்கிறேன் இந்தப்பிரிவினிடை ஆண்மாவற்ற உடலாய் சிலகாலம் நான் இறந்து கிடக்கலாம்.
தாயின் முந்தானைக்கும், காதலியின் கைக்குட்டைக்கும், மனைவியின் முத்தத்திக்கும் என்று தனிப்பட்ட வாசனைகள் இருக்கும், அதனை நாம் என்றுமே அடையாளம் கண்டுகொள்வோம், அதுமாதிரி முகர்தலின் நினைவும் உங்களை ஞாபகப்படுத்தும்.
மடல் 02
நீண்டு கிடக்கிறது நம்முள் ஆன உயிர்
விசாரிப்புகள் இல்லைதாம்
வாரங்களாய் தொடர்கிறது மௌனமான பொழுதுகள்தாம்
இனி மாதங்களாயும் வருடங்களாயும் தொடரலாம்தாம்
உங்கள் நினைவுகளும் இனி எனைக் கடத்திச் செல்லும்
அப்போது நினைவுகள் அதிர்ந்து கண்ணீரும் வரும்,
அல்லது ஒரு துளி நீர்மைக்குள் பல வருடங்களின விசாரிப்புகள் அடைபட்டு முடியும்.
அந்த அர்பமான இரவுகள்
அன்பான விசாரிப்புகள்
அசிங்கமான வரவேற்புகள்
அழகான நிராகரிப்புகள் என்று எல்லாமே என்னுள் பத்திரமாக இருக்கிறது
என் பற்றிய உன்னின் நினைவுகளும் பத்திரமெனக் கொள்கிறேன்
இங்கே நான்
-உன்னின் ஸல்மான்-
(Monday, 01 August 2011)
தொடரட்டும் உங்கள் படைப்புக்கள். ஆதலால் மலரட்டும் நல்ல நல்ல ( எல்லாம் .....)
ReplyDelete