Thursday, March 11, 2010

துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

திருமாவளவனின் 'இருள் – யாழி' எனும் மூன்றாவது கவிதைத் தொகுப்பின் ஏதோவொரு பக்கத்தில் காணக்கிடைத்த ஒரு சிறு எழுத்தின் பகுதிதான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

அதன் பகுதி வருமாறு; 'மனசு மகிழ்ந்து விரியும் கணங்களில் சடுதியில் புகுந்து அழித்துவிட்டுப் போகிறது கடந்தகாலத் துயரங்களின் கொடு நினைவு'.

துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

சுதந்திரமாய் பறக்கும்
வெண்நிறமான
பறவையொன்றினை
நீ நிச்சயமாய்
கண்டிருப்பாய்

சிறகுகள் இருந்தும்
சிறைபடாமல் இருந்தும்
எல்லாம் இருந்தும்
பறக்க முடியவேயில்லை

பெருநிழலாய் தொடரும்
நினைவுகளின் உயிர்
மனம் கிடந்தழும் வாழ்வாயிற்று என்வாழ்வு
துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன் உனக்கு

ஊசியிலை காடுகளினுள்
ஈரம் செறிந்த காரிருலினுள்
யாருமற்ற தனிமையில் அழுமே
அந்த ஒற்றை நிலா

தெருமுனையில்
யாருமற்ற வெளியில்
குப்பையினுள்
முகம் புதைத்தழுவானே
யாறோவொரு அனாதைப்பயல்

வானில்
நட்சத்திர வெளியில்
எது என்னவளின் பாடல்
என ஏங்கித்தவிப்பானே
இருளின் காதலன்

இவை எல்லாமும் என்பாடல்தான்

நீலமான கடலும்
பச்சையான வயலும்
புழுதிபடிந்த நிலமும்
அந்த நிலத்தின் மனிதனும்
என்று விட்டு வர
என்னால் எப்படி முடிந்தது

தாயின் முகம் அறியா வேதனை
அனிச்சையான சாபமோ
இல்லை இச்சையான பாவமோ

முடிவதாய் இல்லை
பெருநிழலாய் தொடரும்
நினைவுகளின் உயிரும்
தனிமையின் இசையும்

மனம் கிடந்தழும் வாழ்வாயிற்று என்வாழ்வு
துயர்மிகு பாடலொன்றினை பாடுவேன்
நான் உனக்கு...

- yousuf salman -
Time 05:10 AM

1 comment:

Please add your commends