Sunday, November 15, 2009

இருண்மை

அலைக்கழியும் மனத்தின் வெளிப்பாடுகளும், அதன் கலையின் வெளிப்பாடுகளும் வாழ்வின் மீதான கசப்பான உணர்வுகளையும், தோற்றங்களையும் கொண்டிருக்கும். எம்வாழ்வு தொலைத்து நிற்கும் வாழ்வின் எதிர்பார்புகள் எல்லாம், வெறும் வெத்துக்கனா என்று இறந்தகாலம் நம்மில் சேறு பூசிவிட்டுச் செல்லும். நம்பிக்கையின் நீளம் மிகக் குருகியதாயும், நம்பிக்கையால் நாம் நிறப்பிய உயிர் கோப்பைகலிலெல்லாம் ரத்தம் கசிவதாயும், மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். எண்ணுள் ஊடாடும் உயிரின் வலியினை என் ஆண்மா பற்றிநிக்கிறது அவ்வளவே!..

இருண்மை

தனிமையில் ஒரு மழை இரவு
தனி அறையில் நான் என் ஆண்மாவோடு
ஆண்மா மழையின் சாரல்வெளியில்
நனைந்துருகி கசிகிறது

நீலம் கவிந்த இருள்
ஈரம் சொட்டச் சொட்ட அங்கே நிலவு
நிலவும் மழைநாள் இரவும் கொள்ளை அழகு

தார் ஊற்றிய பாதைவெளி
உஷ்ணம் புகையாய் வெளிக்கிளர
பாதைவெளி மஞ்சல் ஒளியும், உஷ்ணப்புகையும்
இரவின்அழகு

நெங்சில் அலையென ஒரு பெருங்காற்று
அதுவரைந்த வலிகள் மிகக்கொடுமையாய்
என்னுள் இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது
உயிரின் வலி

மூச்சுக்காற்றில் சூடேற
மனம் கனமான மெல்லிய இருள்களினூடே
தனிமையில் அலைகிறேன்

நினைவுகள் எரித்த இரவின் மிரட்ச்சி
என்னுள் எழும் கேள்விகளோடு
வண்மமான கொடூரம் நிகளும்
இந்த இரவின் நிமிடங்களில் நசுங்கி
இரவோடு எரியலானேன்...

-yousuf salman-

No comments:

Post a Comment

Please add your commends