"அதென்ன நிறங்கள்? வாழ்வின் எல்லா நிமிடங்களுக்கும், வாழ்வின் எல்லா உணர்தலுக்கும் ஏதோவொரு வடிவம் அல்லது உருவம் இருக்கும். அவைதாம் கவிதையாகவோ, ஓவியமாகவோ, ஒளியில் விம்பமாகவோ காலத்தில் வெளிக்கிளறுகிறது. அவ்வகையான உருவங்களுக்கு என்னால் கொடுக்கப்பட்ட படிமம் அல்லது குறியீடுதான் நிறம்"
இடம், காலம், பொருள் என்ற கட்டுக்குள் சிக்காத பள்ளிப்பருவத்தில் சக மாணவியுடன் கிறுக்கிக் கொள்ளும் விசர்தனத்தில் தொடங்கி, வேலைத்தளத்தில் “செம்ம பிகர்" வரையிலும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது நம் காதல் பற்றிய கனவு. அவள் இல்லாத நானும், நான் இல்லாத அவளும் என்று தொடங்கும் காம அல்லது காவியக் காதல்கள், கடல்மனலில் வீடு கட்டி, நிலா வெளியில் முத்தம் இட்டு, பூக்களோடும் அவள் கண்களோடும் கனவுகளில் பெரும்பாலும் கதைபேசி முடிந்திருக்கும். நான் ஒரு நடிகன் என்றும், பெண்களை கவுக்கும் “மைனர் குஞ்சு" என்றும், ஞானி என்றும் விஞ்ஞானக் குருவி என்றும் மரத்திற்கு மரம் கூடு கட்டி பறந்து கொண்டே இருக்கும் இந்தப் பொல்லாத கனவு.
கனவு என்பது மனித மனத்தின் சிருபராயம் முதலே தொடங்கிவிடுகிறது என்றாலும் மனித மனத்தில் கனவு எப்போது தொடங்கிற்று? நாம் முதன் முதலில் கண்ட கனவு என்ன? எப்போது? எதைப்பற்றி? யாருக்காவது ஞாபகம் உள்ளதா? கனவு பற்றி சிக்மன் ஃபிறாய்ட் சொல்வதை கேளுங்கள்!
"கனவில் நம்மை வியக்க வைத்த பல செயல்பாடுகள் நம் ஆழ்மனதினுடையவே என்று இப்போது தெரியவருகிறது. ஆழ்மனதைப் பற்றிய உண்மையை அறிய வந்ததினால்தான், கடந்த காலத்தில், அதை அறிவதற்குமுன், கனவுகள் ஏற்படுத்திய பூதாகாரமான பிரச்சனைகள் இப்போது ஒரு பிரச்சனையாகவே இல்லை. நமது தூக்க நிலையில் மட்டுமின்றி, விழிப்பு நிலையிலும் ஆழ்மனமானது இயங்கிக்கொண்டேதான் உள்ளது"
"விழிப்பு நிலையில் தீர்க்கப்படாத பிரச்சனைகள், கவலைகள், அனுமதிக்கப்படாமல் ஆழ்மனதிற்குள் தள்ளப்பட்ட, அமுக்கப்பட்ட விஷயங்கள் - இவை யாவும் நமது தூக்க நிலையின் சிந்தனைகளாகி, கனவுகளாகப் பரிணமிக்கின்றன"
"எனவே கனவுகள் என்பவை நமது (அமுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட) விருப்பங்களை (மாறுவேஷத்தில்) நிறைவேற்றுபவை என்று கூறலாம்"
என்ற தனது கனவுகளின் விளக்கம் (The Interpretation of Dreams) எனும் நூலை முடிப்பதற்கு முன் ஃபிறாய்ட், "கனவுகள் வருன்காலத்தை அறிவிக்கின்றன என்று பழங்காலத்தில் நம்பப்பட்டது. அந்த நம்பிக்கையில் உண்மையே இல்லை என்று ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது" என்று இறுதியாக சொல்கிறார்.
கனவு காணுங்கள்!
ஆம்! கனவு காணுங்கள்!!
'எல்லாருக்குமே கனவு காண உரிமை உள்ளது. எனவே பெரிய பெரிய கனவுகளை காணுங்கள்'
'கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...
உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு..
ஆம்! கனவு காணுங்கள்!!
முன்னாள் இந்தியகுடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் (Dr. Avul Pakir Jainulabdeen Abdul Kalam) அவர்களை நம் எல்லோருக்குமே ஞாபகப்படுத்தும் வசனங்கள்தான் இவை. சராசரி இந்திய குடிமகனின் இதயங்களிலெல்லாம் 'இந்தியா வல்லரசு' எனும் கனவினை தோற்றுவித்த வசனங்களே இவைதாம் என்றுகூட சொல்லலாம்.
நிறங்கள் போர்த்திய உலகும்
சரி! “பெரிய பெரிய கனவுகள்தான் பெரிய பெரிய இலட்சியங்களை உருவாக்கும்” என்பது மெய்தான் என்றாலும், கனவுகளுக்கும் எல்லைகள் உண்டா! என்பது பற்றி எண்ணினால் சில மறைக்கப்பட்ட, சொல்லப்படாத, கனவுகளின் மயக்கங்களில் நாட்களைத் தொலைத்த உண்மைகள் வெளியாகும். இந்த உண்மைகள் எதைப்பற்றி நமக்கு சொல்கிறது? உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலான புரிதல் பற்றியா? அல்லது வாழ்வின் யதார்தம் பற்றியா?
பள்ளிப்பராயத்தின் இறுதி வருடங்களில், மனம் பிரபஞ்ச எல்லைகள் தாண்டி பயணிக்க நினைக்கும் பொழுதுகளில், தானொரு பொறியியல் வல்லுனர் என்றும், முகாமைத்துவ கணக்காய்வாளன் என்றும், மருத்துவன் என்றும், புனிதமான கலைகளை சமூக அரசியல் பொறிகளை உருவாக்கும் மாமனிதன் என்றும், தன்னைப் பற்றிய நல்ல கனவுகளில் மனம் சஞ்சரிக்கும். அல்லது நேர் மறை ஈர்புகளில் அதாவது காதல் பற்றிய பிரக்ஞையிலும், நட்பென்ற சந்தோஷ புதினங்களிலும் பள்ளிப்பருவ இறுதி வருடங்கள் கனவுகளிலே கழிந்திருக்கும். பள்ளிப்பருவம் முடிந்த சில வருடங்கள் கழித்து பெரும்பாலானவர்களின் வாழ்வின் எதிர்பார்புகள், கனவுகளால் கட்டப்பட்ட கோட்டைகள், இடம்தெரியாத முகவரியாய் மாறி இருக்கும். வாழ்வின் எதிர்பார்புகள், நம்பிக்கைகள் எல்லாம், வெறும் வெத்துக்கனா என்று இறந்தகாலம் நம்மில் சேறு பூசிவிட்டுச் சென்றிருக்கும். கனவு பற்றிய உண்மைகளை, வாழ்வு பற்றிய தெழிவுகளை தேடி அலைகிற இடம் இங்குதான தொடங்குகிறது.
பள்ளி செல்லும் மாணவன் தன் அழகான வாழ்வு பற்றி கனவு கான்பான் என்பது போல், பள்ளி செல்ல வசதி அல்லாத தெருவோரம் அலைந்து திரியும் அனாதை சிருவன், தன் வாழ்வின் என்றோ ஒருநாள் அனுபவித்த இன்னுமொரு தீராப் பொழுது பற்றியேதான் கனவு கான்பான். தெருவோர அனாதைப் பயல்கள் தவிர்த்து நம்மில் பெரும்பாலுமே எல்லோருக்கும் வாழ்வின் உயர்நிலையை அடைவதற்கான எல்லாமும் உண்டு, ஆனாலும் தோழ்விகள் வருகின்றன, நம் கனவுகளோடு சண்டை பிடித்த ஞாபகங்கள் வந்துபோகின்றன.
கனவு கானுங்கள் ஆனால் அதனை அடைந்து கொள்வதற்காக விடாமல் கடுமையாக போராடுங்கள். நம் இயலுமை பற்றிய பிரக்ஞையில் இருந்து விடுபட்டு நனவு நிலைக்கு திரும்புங்கள், யதார்த்தத்தை சரியாய் புரிந்துகொள்ளுங்கள், தன் ஆழுமையை விடாமல் விருத்தி செய்யுங்கள், அதன் பின் கனவு காணுங்கள், ஒரு பெரிய வெற்றி பற்றி, ஓரு அழகான காதல் பற்றி, அந்தி மாலை வெய்யில் பற்றி, காலையின் குளிர்பனி பற்றி, தெருவொர அனாதைப் பயல்களின் செழுமையான வாழ்வு பற்றி.
எல்லா மனிதனும் தன் வாழ்நிலைகளின் உயர்வு பற்றியதான கனவுகளில்தான் வாழ்கிறான், அவன் காண்கிற கனவு அவன் இலக்குகளை நிர்ணயம் செய்கிறது, தன் விழிப்பு நிலையை அவனுக்கு பிறகடனம் செய்கிறது, இன்னும் போறாடத் தூண்டுகிறது, இன்னும் அதிகமாய் கனவு காணச் சொல்கிறது.
இங்கே எல்லாமும் இருக்கிறது; ஆனால் ஏதோவொன்று குறைகிறது. எதுவுமெ இல்லை; ஆனாலும் ஏதோவொன்று இருக்கிறது. இவ்வாறே கழிகிறது வாழ்கை பற்றிய நம் கனவு. பின்னாளில் கனவு கண்டுகொன்டே நாட்கள் கழிந்திருக்கும், ஆதலால் கனவு காணுங்கள்.
-yousuf salman-
No comments:
Post a Comment
Please add your commends