Monday, November 16, 2009

என் காலடியில் கிடந்தழும் நீ!

உன் ஆண்மா
உன் இருப்புவிட்டு
என் காலடியில் கிடந்தழும்

அப்போது
என்னுள்ளும்
ஒரு தீ பற்றிக் கொல்லும்

ஆண்பிள்ளை
எனும் போதையும்
நீ ஒரு கோழை
எனும் பெண்மையும்
தலைக்குள் கொட்டும்

உன் பற்றிய கனவுகள்
நிர்வாணத்தில் கழியும்

அப்போது
உன் ஆண்மா
உன் இருப்புவிட்டு
என் காலடியில் கிடந்தழும்

தீ(நீ) எரிதலில்
என் ஆண்மா
கருகுவதும் மெய்தான்

இங்கே
மெய் என்பதெல்லாம் நானேதான்

தீ(நீ) கருகுவதால் மெய் அழியுமா என்ன?

நீ
உன்
உடல்
விற்றுப் பிழைத்துக் கொள்

அல்ல
உன் உடல் போல்
ஓர் உடலோடு படுத்துக்கொள்

-yousuf salman-

No comments:

Post a Comment

Please add your commends