Tuesday, April 7, 2015

இருண்ட பதிவேட்டின் முதல் புள்ளி


















இருண்ட பதிவேட்டின் முதல் புள்ளி
இவ்வாருதான் ஆரம்பமாகும்


கோடிகளாய் கொட்டிக்கிடக்கும் செறிமானமற்ற கனவுகளின் ஓடை
முளைத்தௌத் துடிக்கும் ஒருஜான் விதையின் பச்சயம்

ஜன்னல் கண்ணாடியும்
பின் தாழில் தெரியும் கரு நீல ஒளியும்
அப்பால் பொழியும் ஈரமான பனிக்காற்றும்

தொண்டை நச நசக்கிறது
அழுகை வரும் போலும் உள்ளது
முழுவதும் தாழிடப்பட்ட அறையினுள்ளே
சுவரை வெறித்த வண்ணம் நான்

எது என் காலம் நான் இருப்பதா
என் ஆண்மா அப்பால் அலைவதா

No comments:

Post a Comment

Please add your commends