Friday, June 4, 2010

இரக்கமற்ற இரவின் நீர்சலனமற்ற பொழுதுகள்

காதல், ஆண்மா, உயிர்ப்பு, மனிதம் இவையெல்லாமும் கொண்டு அலைதலே வாழ்வின் அர்த்தமான நிமிஷங்கள் என்பதில் கருத்து முறனில்லை. ஆனாலும் ஏனோ காதல் பற்றியெல்லாம் எழுத, அல்லது காதலுக்காக அலைந்த நாட்கள் என்றெல்லாம் என்னிடம் இல்லை. வாழ்வின் முறன் அன்றே ஆரம்பமாகிவிட்டது போலும்.

ஆனால் ஏனோ நேற்று, புதிதாய் வயதுக்கு வந்தவன் மாதிரி அவள் பற்றிய கிறக்கத்தில் அலையத் தொடங்கிவிட்டேன், அவளை நான் கண்டது கிடையாது, கனவுகளில் வரும் அவள் நிஐத்தில் நிச்சயமாய் காண்பேனா என்றுகூடத் தெரியாது, அவளின் ஸ்பரிசம் மெல்லமாய் தொடங்கிவிட்டது இந்தக் காதல் கவிதையொன்றால். குல்முகர் மலர் பூத்ததிலிருந்து நூராண்டுகள் வரை தொடர்ந்து பூக்குமாமே!


என்னுள் ஊர்வது உன் உயிர்

உன் மூச்சுக்காற்றின் மென் உரசல்
இன்னும் என்னுள் சுடுகிறது
என்னுள் தீராக்கனவென அலைபவளே, என் அன்பே!
நீ நிலவென அலைகிறாய்
நான் இரவெனத் தேய்கிறேன்

உன் நிறம் போலும் உன் மொழிபோலும்
என் பெருநிலத்தில் ஊர்கிறதுன் உயிர்

இரவின் தனிமையில்
என் நிமிஷங்களை தொலைக்கையில்
துலங்கியதென் உயிர்

மௌனங்களால் சண்டை செய்து
துரத்தி எனை அலையவிட்ட நாட்களுக்கு இங்கிதம் தெரியாது
சண்டைக் கோழிபோல் மல்லுக்கு நிக்கிறது

மிருதுவான உன் சிரிப்புக்கும்
என் நகம் கடிக்கும் உன் இதழ்களுக்கும்
சிலிர்த்து விட்டுச் செல்லும் உன் கூந்தலுக்கும்
பசித்தலையும் காணகத்து மிருகமென அலைகிறேன் நான்

மெல்லிய காலைப் பொன் வெய்யில்
என் உடல் சுடுகையில்
உன் மென் உரசல் உணர்கிறேன் நான்

நம் நற்பின் இடைவெளியில்
புணர்கிறது நம் காதல்.

(yousuf salman)
19 may 2010

1 comment:

  1. அப்படீன்னா எனக்கு ஆப்பா?

    ReplyDelete

Please add your commends